Your Need Our | Advertisement

Your Ad Here

Welcome

Dear Friend!

I welcome the minds who have anything to share their views, ideas, missions, vision, goal, policies, and communal activities all round in education in India and Tamilnadu.Use this platform to have certain key note in the broader area of Education. You can post the methods and materials can be used in the Teaching and Learning process

Saturday, February 6, 2010

தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!

by 



தடுப்பூசி என்றில்லை. எந்த ஊசியும் ஆபத்து தான்.
-oOo- 

  • தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது)
  • தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
-oOo-

ஊசி போட்டவுடன் ஒருவர் மரணமடைகிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்
  1. மருந்தில் தவறு
  2. ஊசி போடப்பட்ட முறையில் தவறு
  3. நபரின் தவறு - அது ஊசியுடன் சம்பந்தம் இல்லாத மரணம்
  4. அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
-oOo-

மருந்தில் தவறு
இது குறித்து அனைவருக்கும் தெரியும்.
  • ஒன்று மருந்து கெட்டு போயிருக்க வேண்டும்
  • அல்லது தவறான மருந்தை அந்த புட்டியில் அடைத்திருக்க வேண்டும்
இது முழுக்க முழுக்க மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தவறு

-oOo-


ஊசி போடப்பட்ட முறையில் தவறு
  • விஷங்கள் அனைத்தும் சரியான அளவில் மருந்தே
  • மருந்துக்ள் அனைத்தும் தவறான அளவில் விஷமே
விஷமென்றும் மருந்தென்றும் தனியாக எதுவும் கிடையாது. அளவே முக்கியம் (The original saying is “Poisons are drugs in large doses and drugs are poisons in small doses. The dose is important”. I have modified it as “Poisons are drugs in WRONG doses and drugs are poisons in CORRECT doses”)
  • அளவிற்கு மிஞ்சினால் அமுதும் விஷமாகும்
  • எனவே ஒரு மருந்தை தவறான அளவில் ஊசிமூலம் செலுத்தினால் விஷமாகும். (இது செவிலியரின் கடமை)
  • அதே போல் அளவு சரியாக இருந்தாலும் செலுத்தும் முறை சரியாக இருக்க வேண்டும் (இது குறித்து ஒரு சிறு விளக்கம் இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ளது) (இது செவிலியரின் கடமை)
  • அதை விட முக்கியம் சரியான மருந்தை செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
  • அதே போல் மருந்து காலவாதியாக வில்லை என்று பார்த்து விட்டு தான் செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
  • மருந்து சரியான முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் (இது மருந்தாளுனரின் கடமை)
-oOo-


ஊசி போடப்படும் நபரின் இயல்பான மரணம் : 
இந்த காரணம் உங்களில் பலருக்கு வித்தியாசமாக தெரியலாம். சிலருக்கு கோபம் ஏற்படுத்தலாம். ஆனாலும் இது கூட முக்கிய காரணம்.
  • உதாரணமாக தமிழகத்தில் சுமார் 6,00,00,000 நபர்கள் இருக்கிறார்கள்.
  • இதில் வருடந்தோரும் சுமார் 480000 மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 63250 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
  • தினமும் 1315 நபர்கள் மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 173 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
  • சென்னையில் மட்டும் தினமும் சுமார் 220 பேர் மரணமடைகிறார்கள்.
2006 ஆம் ஆண்டு சிக்கன்குனியா என்ற ஒரு வைரஸ் நோய் தமிழகத்தில் பலரை தாக்கியது. அப்பொழுது சிக்கன்குனியாவினால் மரணம் கிடையாது என்று அனைத்து மருத்துவ புத்தகங்களிலும் தெளிவாக போட்டிருந்த போதும், ஒரு நாளில் இவ்வாறு இயல்பாக மரணமடையும் 1315 பேரும் சிக்குன்குனியாவில் இறந்ததாக வதந்தி பரவியது நினைவிருக்கலாம். 

அதே போல் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கப்பட்ட நாளிலும் இவ்வாறுஇயல்பாக மரணமடையும் நான்கு 80 வயது நபர்களை காட்டி அது மாத்திரையினால் தான் மரணம் என்று பொய் பிரச்சாரம் நடந்தது.

சமீபத்தில் (அதாவது 2008 டிசம்பரில்) போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதால் குழந்தைகள் மரணம் என்று வதந்தி பரவியது நினைவிருக்கலாம். அது முற்றிலும் வதந்தியே

அப்படியென்றால் இந்த நோயால் இத்தனை பேர் மரணம் என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய்தானா

இல்லை. அப்படி ஒரேயடியாக ஒதுக்க முடியாது !!

ஆனால் இன்ப்ளுயென்சா H1N1னிலால் மரணம் ஏற்படலாம். நாளது தேதி வரையில் தமிழகத்தில் 8.5 லட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7518 பேருக்கு ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை செய்ததில் 205 பேருக்கும் இன்ப்ளுயென்சா H1N1(பன்றிக்காய்ச்சல்) இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 148 பேர் குணமடைந்துள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூவர் இறந்திருக்கிறார்கள்

சென்றவருடம் திருவள்ளூரில் தடுப்பூசி போட்டதால் மூன்று குழந்தைகள் இறந்ததாக வந்த செய்தி உண்மையே !!

ஏன் இப்படி இயல்பான மரணங்களுக்கு காரணம் கற்பிக்கப்படுகின்றன
இதற்கு காரணங்கள் பல
  • ஊடகங்கள் : எதையாவது எழுதி பரபரப்பை உண்டாக்கும் சில பத்திரிகைகள். அவைகளை தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சில ஆங்கில செய்மதி தொலைகாட்சி நிறுவனங்கள்.
  • அரசு வழங்கும் உதவித்தொகை : இவ்வாறு பொய் கூறினால் அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்பதால் தேவையில்லாமல் மரணத்திற்கு சம்பந்தமில்லாத அரசு நிறுவனத்தை இழுக்கிறார்கள். முதலில் சுகாதார துறை மட்டுமே இது போன்ற புரட்டுகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பிற துறைகளும் பாதிக்கப்படுவதை கண்டு நாங்கள் வியந்து போயிருக்கிறோம்(சமீபத்தில் தீ பிடித்ததால் தொலைக்காட்சி வெடித்ததா, தொலைக்காட்சி வெடித்ததால் தீ பிடித்ததா என்று ஐ.ஐ.டி பேராசிரியர்கள் முதல் அனைவரும் ஆராய்ச்சி செய்ததை அறிந்திருப்பீர்கள்)
-oOo-


அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
  • இது குறித்து பலர் அறிந்திருக்க மாட்டீர்கள் (ignorance)
  • அது போல் நான் சொல்லும் தகவல்களை நீங்கள் படித்த பின் நம்பாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது (non acceptance)
  • ஏனென்றால் அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி என்பது மூலம் நாம் அனைவரும் மரணத்திற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதும் உணவு மூலம் / காற்றில் உள்ள மரகந்தம் மூலம் கூட நீங்கள் மரணமடைய வாய்ப்பு உள்ளது என்றால் அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது
  • பிற ஊசிகளை விட தடுப்பூசிகள் போடும் போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம்
கும்பகோனத்தில் ஏற்பட்ட தீவிபத்து முழுக்க முழுக்க மனித தவறினால் ஏற்பட்டது. விதிகளை கடைபிடித்திருந்தால் அதை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்

ஆனால் தற்பொழுது “நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் படி சோதிக்கப்பட்ட ஒரு மருந்தை” “அனைத்து விதிகளின் படியும் ஊசிமூலம் செலுத்தினால் கூட” “ஆரோக்கியமாக தோற்றமளிக்கும் ஒருவர்” மரணமடைய வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் அனாபிலாக்ஸிஸ் அல்லது ஹைபர்சென்சிடிவிட்டி


ஊசிபோட்ட ஒருவர் மரணமடைந்தாலே அது தவறான மருந்தின் மூலம் தான், அல்லது தவறாக ஊசி போட்டதில்தான் என்று தவறான நினைப்பு பரவி வருகிறது.

இதற்கு சில அரைவேற்காடு கட்டுரைகளுடன் / பேட்டிகளுடன் வரும் பத்திரிகைகள் முக்கிய காரணம்.


ஒவ்வாமை / அனாபிலாக்சிஸ் தான் காரனம் என்றால் தடுப்பூசியை நிறுத்த வேண்டியது தானே.


தடுப்பூசியினால் மட்டுமல்ல சாதாரண ஊசி, ஏன் சில வகை காய்கறிகள் கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். ஒவ்வாமையை முழுவதும் தடுக்க முடியாது.

மனித உடம்பு என்பது கருவியில் உருவாக்கப்படுவதில்லை.
  • உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
  • ஆனால் ஒருவரின் உடல் போல் மற்றொருவரின் உடல் இருக்காது.
  • ஒரே தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் 20 தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரு பெட்டி 230 வால்ட் வரை வேலை செய்கிறது 276 வால்டில் வெடிக்கிறது என்றால் மீதி 19 தொலைக்காட்சி பெட்டிகளும் 276வது வால்டில்தான் வெடிக்கும்
  • ஆனால் மனித உடல் அப்படி அல்ல.
    • ஒவ்வொரு நபரின் எடை வேறு.
    • ஒவ்வொரு நபரின் உயரம் வேறு.
    • ஒவ்வொரு நபரின் இரத்த அழுத்தம் வேறு.
    • ஒவ்வொரு நபரின் தோல் நிறம் வேறு.
  • அதே போல் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களும் வேறு
    • உங்களுக்கு பெனிசிலின் ஒவ்வாமை என்றால் அடுத்தவருக்கு செப்ட்ரான் உவ்வாமை. எனக்கு மெட்ரோடினசால் ஒவ்வாமையாக இருக்கலாம்.
  • அதே போல் 99,999 நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு மருந்தை செலுத்தியவுடன் அது ஒத்துக்கொள்ளாமல் 1,00,000வது நபர் மரணமடையலாம்.
ஆக, மனித தவறுகள் துளி கூட இல்லாமல் ஒரு நபரோ பலரோ மரணமடைய வாய்ப்புகள் உள்ளன என்பது கசப்பான செய்திதான். ஆனால் உண்மை கசக்கும் !!

-oOo-

சரி, தடுப்பூசி போடாவிட்டால் குழந்தைகளுக்கு என்னத்தான் நோய் வரப்போகிறது

  

-oOo-

மேலே நீங்கள் பார்த்த படங்கள் அனைத்தும் தடுப்பூசி பரவலாக போடப்படுவதற்கு முன் இருந்த நிலைமை

-oOo-

தற்பொழுது
  • பெரிய அம்மை (ஸ்மால் பாக்ஸ்) உலகில் அறவே கிடையாது
  • தட்டம்மை (மீசீல்ஸ்) சில குழந்தைகளை பாதித்தாலும் அதனால் யாரும் குருடாவதில்லை
  • போலியோவினால் ஒரு குழந்தை நடக்க முடியாமல் போனது 15 வருடங்களுக்கு முன்னர் தான்
-oOo-
  • தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது). அது தவிர பிற குழந்தைகள் தான் மேலே இருக்கும் படங்களில் இருப்பது போல் பாதிக்கப்படுபவர்கள்
  • தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
-oOo-
Download As PDF

No comments:

Post a Comment