Welcome
Dear Friend!
I welcome the minds who have anything to share their views, ideas, missions, vision, goal, policies, and communal activities all round in education in India and Tamilnadu.Use this platform to have certain key note in the broader area of Education. You can post the methods and materials can be used in the Teaching and Learning process
11.09.2009 மலை 6 மணிக்கு டார்வின் 200 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டமாக -
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாம்பரம் கிளை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பேபி உயர்நிலை பள்ளியில் ஒரு அற்புதமான நிகழ்வை நடத்தினர். இவ்விழாவிற்கு
மருத்துவர் சந்திரா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி
ஆசிரியர் வெங்கடேசன் எடுத்துரைத்தார். விழாவின் அரசர்
பேராசிரியர் முனைவர் ப.தயானந்தன் அவர்கள்
"அனைதுயர்களின் பெரும் ஒருங்கிணைப்பு" பற்றி டார்வினின்பார்வையில் நழுவு பட காட்சியாக சுமார் 11/௨ மணி நேரத்திற்கும் மேல் விளக்கமளித்தார். அவரது உரை அழகிய எளிய தமிழில் அனைத்து வயது தரப்பினரையும் கவரும் விதத்திலும் , தகவல் செறிவு மிக்கதாயும் இருந்தது.
இத்தகைய பொது நிகழ்வுக்கு திட்டமிட்டு சிறப்பாக நடத்திய
திரு.தேவ பிரகாஷ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
மீண்டும் இப்பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து பொது மக்களுக்கு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அனைத்து பகுதி மக்களுக்கும் எடுத்து செல்ல திட்டமிட செய்யவும்.
தொடர்புக்கு 9840511638, 944387494
பதிவுகள்

Download As PDF
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 25 ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! என்னும் கோஷங்களுடன் இயங்கி வரும் ஒரு தொன்டு நிறுவனம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அறிவியலை பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற ஒரு மக்கள் இயக்கமாகும். பொதுமக்களிடையே அரங்க கூட்டங்கள் , கலை பயணங்கள் , பிரச்சாரங்கள் மற்றும் வெளியீடுகள் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்பட ஒரு மூலகாரனமாய் இயங்கிவருகிறது. துளிர், ஜந்தர் மந்தர் என இரு இதழ்களை வெளியிட்டு அதன் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. துளிர் இல்லம் என்னும் பள்ளி குழந்தைகளை கொண்ட குழுவை உருவாக்கி அவர்களுக்கு மாதந்திர கூட்டம் நடத்தி எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா? காகித கலை போன்றவற்றை கற்றுக்கொடுத்து அவர்களை அக்கலைகளில் வல்லவர்களாக மாற்றி வருகிறது. மேலும் மாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கையும் , ஆராய்ச்சி உணர்வையும் தூண்ட ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, விநாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் பல்வேறு தரப்பினரிடையே அறிவியலை பரப்பி வருகிறது. நாம் வாழும் சமுதாயத்தில் கண்மூடித்தனமாக ஆண்டாண்டு காலமாக நிலவிவரும் மூட நம்பிக்கைகளை அகற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
வாருங்கள் நாமும் இணைவோம்! அறிவியலை பரப்புவோம்!
தொடர்புக்கு 044-28113630 , 9840511638
Download As PDF