தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 25 ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! என்னும் கோஷங்களுடன் இயங்கி வரும் ஒரு தொன்டு நிறுவனம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அறிவியலை பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற ஒரு மக்கள் இயக்கமாகும். பொதுமக்களிடையே அரங்க கூட்டங்கள் , கலை பயணங்கள் , பிரச்சாரங்கள் மற்றும் வெளியீடுகள் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்பட ஒரு மூலகாரனமாய் இயங்கிவருகிறது. துளிர், ஜந்தர் மந்தர் என இரு இதழ்களை வெளியிட்டு அதன் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. துளிர் இல்லம் என்னும் பள்ளி குழந்தைகளை கொண்ட குழுவை உருவாக்கி அவர்களுக்கு மாதந்திர கூட்டம் நடத்தி எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா? காகித கலை போன்றவற்றை கற்றுக்கொடுத்து அவர்களை அக்கலைகளில் வல்லவர்களாக மாற்றி வருகிறது. மேலும் மாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கையும் , ஆராய்ச்சி உணர்வையும் தூண்ட ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, விநாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் பல்வேறு தரப்பினரிடையே அறிவியலை பரப்பி வருகிறது. நாம் வாழும் சமுதாயத்தில் கண்மூடித்தனமாக ஆண்டாண்டு காலமாக நிலவிவரும் மூட நம்பிக்கைகளை அகற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
வாருங்கள் நாமும் இணைவோம்! அறிவியலை பரப்புவோம்!
தொடர்புக்கு 044-28113630 , 9840511638
Download As PDF
No comments:
Post a Comment